என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மாணவிகள் பார்வையிட்டனர்
நீங்கள் தேடியது "மாணவிகள் பார்வையிட்டனர்"
கரூரில் நடந்த மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் 83 படைப்புகள் காட்சிக்காக வைக்கப்பட்டன. இதனை மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.
கரூர்:
கரூர் மாவட்ட பள்ளிகல்வித்துறை, புதுடெல்லி அறிவியல் தொழில்நுட்பத்துறை மற்றும் சென்னையிலுள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் இணைந்து புத்தாக்க மாவட்ட அறிவியல் ஆய்வு விருது கண்காட்சியை வாங்கல் எல்லைமேடு வெற்றிவினாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடத்தியது. இதில் கரூர் மாவட்டத்தில் உள்ள 83 வகை பள்ளிகளை சேர்ந்த மாணவ,மாணவிகளின் 83 அறிவியல் படைப்புகள் காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்தன.
அறிவியல் சிந்தனையை மேம்படுத்தவும், அறிவியல் திறனை வளர்ப்பதற்காகவும், சமுதாய பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய வகையில் குறைந்த செலவில் அந்த படைப்புகள் வடிவமைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கண்காட்சியை மாவட்ட கலெக்டர் அன்பழகன் நேரில் பார்வையிட்டார். அப்போது மாணவர்கள் தங்களது படைப்பின் செயல்பாடுகள் குறித்து ஆர்வத்துடன் விளக்கம் அளித்தனர்.
ஒவ்வொரு படைப்புக்கும் மாணவர்களின் வங்கி கணக்கில் தலா ரூ.10 ஆயிரம் வரவுவைக்கப்படும். இதில் 17 படைப்புகள் மாவட்ட அளவில் தேர்வுசெய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அதில் 8 படைப்புகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வுசெய்து அனுப்பப்படுகிறது. அதில் தேர்வானவர்கள் தேசிய அளவில் கலந்துகொள்வார்கள். மாணவ,மாணவியர்களின் அறிவியல் படைப்புகளை தேர்வு செய்ய தேசிய புத்தாக்க நிறுவன நடுவர் மொஜீன், கரூர் அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த அறிவியல், தாவரவியல், வேதியியல், விலங்கியல் துறையை சேர்ந்த பேராசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர். நிறைவாக பெங்களூரு தேசிய கல்விவள நிறுவன இயக்குநர் ஆர்.பால மோகன் ராமசாமி மாணவ,மாணவிகளை ஊக்கப்படுத்தி பேசினார். இந்த கண்காட்சியை மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தங்கவேல், மாவட்ட கல்வி அதிகாரிகள் கனகராஜ், கபீர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு ஆரோக்கியராஜ், பள்ளி தாளாளர் சாமிநாதன், ஆலோசகர் பழனியப்பன், முதல்வர் பிரகாசம், மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X